மடிக்கணினியை மறைத்து வைப்பாள் - என்
உடைகளை ஒளித்து வைப்பாள்
காலில் விழுந்து வணங்குவாள்
உறங்கும்முன் உறுதிமொழி
வாங்குவாள்
அலுவலகம் நான் போககூடாதென்று !
குறைந்தபட்சம் சீக்கிரம் திரும்பும்படி
முகம் திரும்பி நிற்பாள் என் மகள் !- பாவம்
அரசாங்கத்திற்கே எது அவசியம் என்று தெரியவில்லை
ஆறு வயது மகளுக்கு எங்கனம் புரியும் !
அம்மா ஆசிரியை பள்ளி செல்லவில்லை !
அடுத்த வீட்டு அரசு அலுவலர் போகவில்லை!
மேல் வீட்டு மென் பொறியாளர் போகவில்லை!
அப்பா மட்டும் ஏன் என -அவள் ஏக்கம் ,நியாயமே !
ஊடகங்கள் ஊதி பெரியதாக்கி விட இந்த
கோரோனோ காலகட்டத்திலும் ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு துறை இந்த விநியோக சங்கிலி (SUPPLY CHAIN)
எந்த கைதட்டும் எங்களுக்கில்லை
பூச்சொரிதலும் ,பொன்னாடையும் எதுவுமில்லை
இருந்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்
மருத்துவ சாதனங்களையும் ,மருந்துகளையும்
உணவு பொருட்களையும் ,உற்பத்தி பொருள்களையும்
சுமந்து கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம்
இலட்சக்கணக்கான ஓட்டுனர்கள் ,அதனை இயக்குபவர்கள்
விபத்துக்களையும் , ஆபத்துகளையும் தாண்டி
வெயிலும் வேர்வையுமாய்
உணவகங்களின்றி பல சமயங்களில் பசி பட்டினியோடு
எல்லை பல கடந்தும் ,சொல்லவியலா பல தொல்லைகள் கடந்தும்
இடம் பொருள் ,இரவு பகல் பாராமல்
சேர வேண்டிய இடங்களுக்கு சேர்த்துக்கொண்டே இருகிறார்கள்
இறக்குமதி,ஏற்றுமதி,உள்நாட்டு விநியோகம் என
இயங்கி கொண்டேஇருக்கிறோம் , இயக்கி கொண்டே இருக்கிறோம்
உலகம் இயங்க ஏதுவாய் எங்கள் KERRY INDEV குழுமம்
ஓய்வில்லாமல் மகத்தான பணியை செய்கிறது
அதன் பணியாளர்கள் என்ற முறையில் பெருமை கொள்கிறோம்
அப்பெருமை மகளின் யாசகம் மறந்து மகிழ்ச்சியை தருகிறது
………….தை .ரூசோ……….