காற்று உள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும் .. மழை காலம் முடியும் முன்பே மாத்தேரான் சென்று வர வேண்டும் ..
எப்போதாவது அத்தி பூத்தாற்போல் கிடைக்கும் இடைவெளியில் அந்த மலை பயணம் -
மனைவி மற்றும் மழலையுடன் அவரவர் உடமையை அவரவர் சுமந்தபடி
எங்கேயும் கால்கள் வலிக்காதபடி எங்கெங்கும் சிறு சிறு அருவிகள் , இடையிடையே ஓடை
பசுமை குடை பிடித்தாலும் சாரலில் நனைந்தபடி அந்த நடை பயணம் !
மனதை புதுப்பித்துக்கொள்ள அருமையான தருணம்
மலை மருவி அருவியாய் மாறி கொண்டிருந்த தருணம் ..
மரம் முகில் பறக்க தேனீர் பருகி கொண்டிருந்தன ..
மலை நீர் கழுவி கழுவி காயம் பட்ட சாலைகள்
நாமெல்லாம் துச்சாதனன்கள் துகிலுருக்கப்பட்ட நெகிழிகள் ..
நினைக்காத நேரத்தில் நனைத்துவிடும் குளிர் .. ..
மனைவியை போல இந்த மழை கொட்டி தீர்க்கிறது
மச்சினிச்சியை போல தென்றல் தீண்டி செல்கிறது
எப்போதாவது எட்டி பார்க்கிறது அந்த சூரியன்
வசதியான மும்பை பெண்கள் ஏழ்மையான உடையில் !
மழைக்காலத்தை முழுவதுமாய் அனுபவிப்பவர்கள் இந்த மும்பை வாசிகள்
மூடுபனி கூட்டம் கூட்டமாய் முழு அடைப்பு செய்துகொண்டிருந்தது
மரங்கள் குடை பிடித்திருந்தாலும் அருவியாய் அழுதுகொண்டிருந்ததது அந்த மலை !
றக்கி வைத்த
அலுவலக மன அழுத்தங்கள் கொஞ்சம் , நில சரிவுகளில் நிச்சயம் புதைந்து போயிருக்கும்
இந்த வருடமும் ,இன்னும் சில நாட்களில் மழை காலம் தொடங்கி விடும்






No comments:
Post a Comment