குழுவோடு இந்த பயணம்
குதுகளமிக்கது, எந்த வரையறுத்தலும்
திட்டமிடலும் இல்லாத ஒன்று
எதுகை மோனை போன்ற
எதுவும் இல்லாதது எங்கள் குழு
பல மொழி குழு எனலாம் ..!
கொங்கன் ரயில் வழித்தடம் போன்று
கொள்ளை அழகான பாதை
இந்தியாவில் வேறெதுவும் இல்லை..!
மும்பையிலினருந்து செல்லும் வழியெங்கும்
குகைகள், அருவிகள், சிறு சிறு குன்றுகள்
இடைமறிக்கும் ஆறுகள், தென்னை மர
இடைவெளியில் தெரியும் ஊறுகள்
தென்றல் தாலாட்ட ,கோவாவில் தஞ்சமடைந்தோம்
வந்தது வங்கமா கோவாவா என கேட்க்கும் அளவுக்கு
வழியெங்கும் திரிணாமுல் தீதி யின் புகைப்படம்
அங்கும் அவர் கட்சி ஆரம்பித்திருக்கிறாம் ..
மூன்று படுக்கையறை கொண்ட
அந்த வீட்டில் நீண்ட நேரம் செலவிட்டது
உணவு கூடம் என்பதை நான்
சொல்லி தெரிந்துகொள்ள தேவையில்லை..
எங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருந்ததன்
முக்கிய காரணம்
அன்னன் ஜேசுராஜ் அவர்கள் ( Jesuraj Mumbai Dmk )
பயணம் முழுவதும் களைப்பே இன்றி அவரும்
எங்களையும் வழிநடத்தினார்
என்றே சொல்ல வேண்டும்
அவரின் நகைசுவை உரையாடலில்
நேரம் போனதே தெரியவில்லை
திமுக நிறம் பதித்த முகக்கவசம் ,சன் க்ளாஸ்
என எல்லாருக்கும் வழங்கி
ஒவ்வொரு நொடியும் கழகத்தை பற்றியே
என்னம் கொண்ட மிகசிறந்த திமுக நிர்வாகி அவர்
நிறைய இடங்கள் கோவாவில் இருக்கிறது
கண்டு மகிழ்வதற்கும் உண்டு களிப்பதற்கும்
வியக்க வைக்கும் தேவாலயங்கள்,கோட்டைகள்
கடற்கரை ,கப்பலில் கேளிக்கை விளையாட்டுகள்
என எக்கச்சக்கம் ..
மழைக்காலம் இன்னும் அழகாயிருக்கும்
கோவா கோவிச்சுக்கக்கூடாது என்பதால்
மூண்று வேளை மட்டும் குடித்துவிட்டு
கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தோம்
(மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு )
போதுமான நினைவுகளை பொதிசெய்து
புறப்பட்டோம் விடுமுறை முடிந்து!







No comments:
Post a Comment