எந்த அரசியல் பேனரும்
என்னை வரவேற்கவில்லை
கட் அவுட்கள்
காலில் விழுந்துவிடுமோ
என்ற பயமும் இல்லை
சாலையெங்கும்
புகையிலை கோலம்
காலையில் எழுந்தவுடன்
க்யூவில் நிற்கும் கூட்டம்
ரேஷன் கடையோ
பால்பூத்தோ இல்லை
மிட்டாய் கடையில்
அம்பது பைசாவுக்கு மேல்
அதிகம் கேட்காத ஆட்டோகாரர்
ஒரு ருபாய் கூட கொடுத்தால்
கும்பிடு போடுகிற ரிச்ஷாகாரர்
அழகு கலை கூடங்களோ
சிற்பம் நிறைந்த கோவில்களோ இல்லை
வங்கத்து பெண்கள் இருக்க
இவையெல்லாம் எதற்கு..?
கவலைப்படாத கடைக்காரர்கள்
பொறுமையான வாடிக்கையாளர்கள்
ஊர்தான் குப்பையாக இருக்கிறது
உள்ளம் சுத்தமாக இருக்கிறது..
வங்காளம் என்று
வந்துவிட்டால் ஒன்றுகூடி விடுவார்கள்
கவிஞர்கள் நிறந்த ஊர்தான்
கூடவே கவிதைகளும் வள்ர்வதால்..
ஷேர் ஆட்டோவில்
செல்லும்போது அருகில் இருப்பவர்
சட்ட மண்ற உருப்பினராகவோ
கவுன்சிலராக கூட இருக்கலாம்..
மாநிலத்தில் நடப்பது
கம்யூனிஸ்ட் ஆட்சியென்றால்
வீட்டில் நடப்பது பெரும்பாலும்
காளீயின் ஆட்சிதான்..
குப்பத்து பெண்ணோ, குடும்பத்து பெண்ணோ
கோடிஷ்வரபெண்ணோ
பேதம் பார்ப்பதில்லை
திருவிழா என்று வந்துவிட்டால்
தெருவில் போடும் குத்தாட்டம்
இதற்கு சாட்சி..
சமுதாயம் சாடுமோ
சம்பந்தி திட்டுமோ என்ற கவலையில்லாமல்
அவர்கள் ஆடுகிற அழகு முக்கியமில்லை
அந்த சுதந்திரம் அழகானது..!
ஒரு கோப்பை தேனிர்
ஒரு கட்டு பீடி
பொறியல் மீனும்
போதுமென வாழ்கிற வர்க்கம்..!