
ஒரு பெண்ணின்
கருவிலே உருவானாள்
ஒரு பெண்
பூமியில் பிறந்தாள்
கருவிலே உருவானாள்
ஒரு பெண்
பூமியில் பிறந்தாள்
புன்னகையும் அற்றவளாய்
வெறுப்பு பார்வையின்
அரவணைப்பில்
வளர்ந்தாள்
பள்ளி பாடங்களில்
பள்ளி பாடங்களில்
தேய வேண்டியவள் பாத்திரம்
தேய்த்து கொண்டிருந்தாள்
வயதுக்கு வந்தவுடன்
வந்தனம் சொல்லியது
மிச்சம் இருந்த சுதந்திரம்
திருமண சந்தையில்
திருப்திகரமான விலைக்கு
விற்க்கபட்டாள்
இங்கே அவளுக்கு
பதவி உயர்வு
பகலில் வீட்டை
இரவில் கனவனை கவனித்துக்கொள்ள
மகன் வளர்ந்தான்
இவள் தேய்ந்தாள்
மருமகளின்
மறு ஆட்சி வந்தது
மறு ஆட்சி வந்தது
இவளோ பொறுத்தாள்
மறுமகளோ வெறுத்தாள்
விளைவு
முதியோர் இல்லம்
அவளது முதுமைப்பருவம்
முடிந்தவனையும் மறந்துவிட்டாள்
மூச்சையும் மறந்துவிட்டாள்..
முகம் பார்க்க வந்த மகன்
முடிவான பள்ளத்தில்
மூடிவிட்டு சென்றுவிட்டான்..
(நான் கவிதை என்று எழுத ஆரம்பித்த போது எழுதிய முதல் கவிதை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது)


No comments:
Post a Comment