Sunday, November 4, 2012

கரை நாடி வந்த காதலி

 திரை  கடல் ஓடி ,ஓய்ந்து
கரை நாடி வந்த காதலி..
...
கைதான கப்பல் நிர்வாகிகளுக்கு
ஜாமீன் கிடைத்து விடும்..
கப்பல் உரிமையாருக்கு

 காப்பீடு கிடைத்துவிடும் ..
சூடான செய்தி ஒன்று
ஊடகங்களுக்கு கிடைத்துவிடும் ..
(அன்ன ஹசாரே அச் என்று தும்மி
அப்போலோ மருத்துவர்கள் பரிசோதனை என
அரை நிமிடத்திற்கு ஒரு செய்தி வாசித்த
ஆங்கில செய்தி  மீடியாக்கள் என்ன ஆயிற்று என்று
  தெரியவில்லை!தமிழ் நாட்டின் செய்தியெல்லாம்
அவர்களுக்கு செய்திய்ல்லை போல ..)
வண்டி வண்டியாய்  கட்டு சோறு கட்டி
வந்த  சென்னை வாசிகளுக்கும் ஒரு
  பொழுது போக்கு கிடைத்து விட்டது ..
 வண்ண வண்ண  கனவுகளோடு
கப்பல் வேலை சேர்ந்து   பரிதாபமாக
இறந்து  போன ஆறு  பேரின்
உயிர் திரும்ப  கிடைக்குமா ?
மறந்து விடுங்கள் மக்களே
மற்றுமொரு மந்திரி வீட்டு ஊழல்தான் இதுவும் ..!

Thursday, November 1, 2012

நிலம்

நிலம் புயலில்
நனைந்துவிடாமல் இருக்க
சாலைக்கு
குடை பிடிக்கும்
மரங்கள் ..
(இடம் கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை)