Sunday, May 31, 2009

காதலின் நம்பிக்கைகள்



கவிஞனான எனக்கு
மூட நம்பிக்கைகள் கிடையாது
காதலனான எனக்கு
மூட நம்பிக்கைகள் உண்டு

எதிரிலிருக்கும்
அம்மன் கோவிலுக்கு
ஏழெட்டு முறைதான் போயிருப்பேன்
உன்னை பார்த்த பிறகு
எட்டி கூட பார்த்ததில்லை

நம்பாதீர்கள்
இதெல்லாம் நடக்காது என்று
நன்பர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு
உனக்கான
ராசிபலனை நாளிதலில் பார்ப்பேன்
நிதமும்..

நீ அருகில் இல்லாவிட்டாலும்
எங்கிருந்தோ என்னை பார்ப்பதாக
நம்பிக்கொண்டு
என்னை விரும்பி பார்க்கும் பென்களைக்கூட
திரும்பி பார்க்க மறுக்கிறேன்..
நீ கோபித்துக்கொள்வாயோ
என்ற குருட்டு நம்பிக்கைதான்..

Saturday, May 30, 2009

நீ பிரிந்த வேளையிலே..


தீ
திரியை பிரிகின்ற பொழுதில்
தீக்குள் நிகழும்
படபடப்பை போல
என் இதயம்
நீ பிரிந்த வேளையிலே..

எதிர் எதிரே
இருவரும்
பிரிந்து கடந்து போகிறோம்
நம் மௌனம் மட்டும்
ஒன்றாய் போகிறது
தினமும் உதிக்கும்
சூரியனாய் இரு
சுட்டெரித்தாலும்
தாங்கி கொள்வேன்
குளிரும் பௌர்ணமியாய் வேண்டாம்
பிரிவை தாங்கி கொள்ள
என் இதயம் ஒன்றும்
பாறை அல்ல




Friday, May 29, 2009

கொஞ்ச கொஞ்சமாய்




பள்ளி முடிந்து
தோழிகளோடு நீ வருகையில்
எல்லா பென்களும்
என்னையே பார்க்க.
நீ மட்டும்
என்னை பாராமல்
மண்ணைப் பார்த்து
நடந்து போனபோது கொஞ்சமும்..

தெருவில்பெய்யும்
மழையின் சாரல்
தன்னையும் அறியாமல் சிறிது
ஜன்னலையும் நனைத்துவிட்டு போகுமே
அதுபோல
உன்னையும் அறியாமல்
உன் பார்வை
என்னைபார்த்துவிட்டு
போன போது கொஞ்சமும்..

வானிலை அறிக்கையைப் போல
உன் பார்வை
ஒவ்வொரு நாளும்
வெவ்வேறு அர்த்தத்தையும்..
விதவிதமான ஏமாற்றத்தையும் தந்தாலும்
உன்னையும் மீறிய
உன் உதட்டுப்புன்னகையை
நழுவவிட்டு போனபோது கொஞ்சமும்..
அடுத்தவீட்டு குழந்தையை
இடுப்பில் இருத்தி..
கொஞ்சலும்..குழந்தையுமாய்..
குழந்தையும் குழந்தையுமாய்..
கொஞ்சூன்டு கொஞ்சலை
கடைகண்ணில் எனக்கு
கொடுத்துவிட்டு போனபோது கொஞ்சமும்..

கொஞ்ச கொஞ்சமாய். .
கொடுமையான ஒரு கிருமியைப்போல
என் உடலெங்கும் பரவி விட்டாய்
ஆனாலும்
மரணத்திற்கு பதில்
ஜனனத்தை தருகிற
அழகான கிருமி நீ..

Saturday, May 16, 2009

ஈரம்


மழை மன்னோடு
நடத்திய முத்த யுத்தத்தில்
இறந்துகிடந்த
அந்த ஈரத்தில் - நான்
வழுக்கி விழுந்துவிட கூடாதென்று
பார்த்து பார்த்து நடந்து
போவதை பார்த்து
நீ புன்னகைத்து பார்த்ததில்
ஈரம் படியாத உன்
விழிகளில்
வழுக்கி விழுந்தேன்
முதன் முறையாக..

உறக்கம் எழுதும் கவிதை


உறக்கம் எழுதும் கவிதை
இந்த கனவுகள்..

இரவில் விதைத்தால்
விடிவதற்குள்
பூத்துவிடும் செடி
கனவு மட்டும்தான்..

கனவுக்கு
பசியெடுத்தால் நம்
நேரத்தை சாப்பிட்டுவிடும்..

அதிகாலை கனவுகள்
கரைந்துபோய்விடுகின்றன
பனித்துளியின் அடர்த்தியில்..

அவளுக்காய் காத்திருக்கிறபோது
அவள் வரவில்லை.- இந்த
கனவு மட்டும் தவறாமல்
வருகிறது..

ஏய் கனவே
உறங்குவது போல
ஒரு கனவை கொடு
அப்போதாவது
உறங்கிகொள்கிறேன்..

எல்லா கல்லறைகளிலும்
ஏதாவது ஒரு
கனவும் சேர்த்தே
புதைக்கப்படுகிறது..

Thursday, May 7, 2009

பெரிசுகள்


ஊரோரம் ஒதுக்குப்புரம்
கூரைமேஞ்ச ஒரு முன்னாள் டீக்கடை
கயிறு பின்னிய கட்டில்ல ஒரு பெரிசு
கல்லுத்திண்டுல இன்னொரு பெரிசு..

நெற்றி கோடுகள் வயதை
அறிவித்துக்கொண்டிருந்தன
எலும்புகளை பார்க்க இனி
எக்ஸ்ரே தேவைப்படாது.
இடுப்பில் ஒரே ஒரு துண்டு
மானத்தை மறைப்பதற்காக இல்லை
குளத்தங்கரையில் துவட்டுவதற்காக..

கருவமரத்தை அவரே வெட்டி செதுக்கிய
கைத்தடி ஒன்று
மகன் மறந்துவிட்டால் கடைசியில்
மிஞ்சுவது இது மட்டுமே..

பெரிசுகள் இருவரும்
பழசை அசைபோட்டனர்
பக்கத்து ஊர் கொட்டகையில்
படம் பார்த்த கதை
ஒன்பது வயதில்
ஓணான் விரட்டிய கதை
புதுசாய் போட்ட ரோடு
பழசான வரப்பு மேடு
வயக்காட்டு சண்டை என
வாய்வலிக்காமல் பேசிக்கொண்டனர்..

பேச்சு நிகழ் காலத்தை
நெருங்கியது..

மகனோடு பேசுறதில்லையா?
மருமக வந்ததிலுருந்து..
மக இருக்க..? வருமா?
அப்பப்ப வரும்..மாமியார் சரியில்லையாம்..
கஞ்சிக்கு?..
...!?

கட்டிலுக்கடியில் அவர் வளர்த்த
நாய் ஒன்று நன்றியோடு கிடந்தது..
இப்ப கஞ்சி கிடைக்கலனாலும்
எப்பவோ போட்ட கஞ்சிக்காக..