
மழை மன்னோடு
நடத்திய முத்த யுத்தத்தில்
இறந்துகிடந்த
அந்த ஈரத்தில் - நான்
வழுக்கி விழுந்துவிட கூடாதென்று
பார்த்து பார்த்து நடந்து
போவதை பார்த்து
நீ புன்னகைத்து பார்த்ததில்
ஈரம் படியாத உன்
விழிகளில்
வழுக்கி விழுந்தேன்
முதன் முறையாக..
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment