Friday, May 29, 2009

கொஞ்ச கொஞ்சமாய்




பள்ளி முடிந்து
தோழிகளோடு நீ வருகையில்
எல்லா பென்களும்
என்னையே பார்க்க.
நீ மட்டும்
என்னை பாராமல்
மண்ணைப் பார்த்து
நடந்து போனபோது கொஞ்சமும்..

தெருவில்பெய்யும்
மழையின் சாரல்
தன்னையும் அறியாமல் சிறிது
ஜன்னலையும் நனைத்துவிட்டு போகுமே
அதுபோல
உன்னையும் அறியாமல்
உன் பார்வை
என்னைபார்த்துவிட்டு
போன போது கொஞ்சமும்..

வானிலை அறிக்கையைப் போல
உன் பார்வை
ஒவ்வொரு நாளும்
வெவ்வேறு அர்த்தத்தையும்..
விதவிதமான ஏமாற்றத்தையும் தந்தாலும்
உன்னையும் மீறிய
உன் உதட்டுப்புன்னகையை
நழுவவிட்டு போனபோது கொஞ்சமும்..
அடுத்தவீட்டு குழந்தையை
இடுப்பில் இருத்தி..
கொஞ்சலும்..குழந்தையுமாய்..
குழந்தையும் குழந்தையுமாய்..
கொஞ்சூன்டு கொஞ்சலை
கடைகண்ணில் எனக்கு
கொடுத்துவிட்டு போனபோது கொஞ்சமும்..

கொஞ்ச கொஞ்சமாய். .
கொடுமையான ஒரு கிருமியைப்போல
என் உடலெங்கும் பரவி விட்டாய்
ஆனாலும்
மரணத்திற்கு பதில்
ஜனனத்தை தருகிற
அழகான கிருமி நீ..

No comments:

Post a Comment