
தீ
திரியை பிரிகின்ற பொழுதில்
தீக்குள் நிகழும்
படபடப்பை போல
என் இதயம்
நீ பிரிந்த வேளையிலே..
எதிர் எதிரே
இருவரும்
பிரிந்து கடந்து போகிறோம்
நம் மௌனம் மட்டும்
ஒன்றாய் போகிறது
தினமும் உதிக்கும்
சூரியனாய் இரு
சுட்டெரித்தாலும்
தாங்கி கொள்வேன்
குளிரும் பௌர்ணமியாய் வேண்டாம்
பிரிவை தாங்கி கொள்ள
என் இதயம் ஒன்றும்
பாறை அல்ல


No comments:
Post a Comment