Thursday, February 4, 2010

நூறு தடவையாவது
திரும்பத் திரும்ப
சொல்லியிருப்பேன் நண்பர்களிடம்..
நீ என்னை முதல் முறையாக
திரும்பிப் பார்த்ததை..!

இருநூறு காகிதங்களையாவது
கசக்கி எறிந்திருப்பேன்..
உனக்காக நான் எழுதிய
முதல் கவிதைக்காக..!
முன்னூறு முறையாவது
படித்திருப்பேன்..- உன்
முக்கால் வரி பதில் கடிதத்தை..!
நானூறு தடவையாவது
நாக்கைக் கடித்திருப்பேன்..
மற்றவர்களின் பெயருக்குப் பதிலாக
உன் பெயரை உச்சரித்து..!
ஐந்நூறு அல்ல,
ஆயிரமுறையல்ல..
கோடி முறை வேண்டுவேன்
ஒன்றே ஒன்று மட்டும் வேண்டுமென்று - உன்

அன்பு ஒன்று போதுமென்று..!