மழையில் குளித்தே தன்னை தானே
துவட்டிக்கொள்கிறது இலைகள்!
குழந்தைகளின் முத்தத்தில் தான்
மழையென்பதை மறந்து மகிழ்கிறது!
ஒரு துளி முத்தமேனும் ஓட்டுக்குள்
ஒளிந்துக்கொண்ட நத்தைக்கு தரமுயல்கிறது!
வற்றிய புல்லுக்கு ஒற்றை கண்ணீராய் உருவெடுக்கிறது!
ஒரு விதையின் பனிக்குடத்தை உடைத்துவிடுகிறது !
இறந்த மலருக்கு இறுதியாத்திரை நடத்துகிறது !
ஏதோவொரு தேடலில் முடிவற்று முடிகிறது !