உன் கோபம் என்னை கோபப்படச்செய்யவில்லை
உள்ளபடி உன் பாராமுகம்தான் ஏதேதோ செய்கிறது
மண்ணுக்குள் புதைந்த வேரை போல அழச்செய்கிறது
உதிர்ந்த மலரின் இதழை போல
கேட்ப்பாரின்றி வெறுமையடைகிறது
உறக்கங்களை இருள்பறித்துவிட்டு இரவாகிப்போனது
வெளிச்சத்தின் மடியிலும் நிழலாக சாய்கிறேன்
தனிமையை அரவணைத்து
உன்கோபங்களிருந்து விடுபட்டுக்கொள்கிறேன்
அடுத்த முறையாவது சொல்லிவிடு
உன்கோபத்தின் காரணத்தை!
No comments:
Post a Comment