Wednesday, November 8, 2023

உன் கோபம்

 

உன் கோபம் என்னை கோபப்படச்செய்யவில்லை

உள்ளபடி உன் பாராமுகம்தான் ஏதேதோ செய்கிறது 

மண்ணுக்குள் புதைந்த வேரை போல அழச்செய்கிறது

உதிர்ந்த மலரின் இதழை போல 

கேட்ப்பாரின்றி வெறுமையடைகிறது 

உறக்கங்களை இருள்பறித்துவிட்டு இரவாகிப்போனது 

வெளிச்சத்தின் மடியிலும் நிழலாக சாய்கிறேன் 

தனிமையை அரவணைத்து 

உன்கோபங்களிருந்து விடுபட்டுக்கொள்கிறேன் 

அடுத்த முறையாவது சொல்லிவிடு 

உன்கோபத்தின் காரணத்தை! 



No comments:

Post a Comment