உத்திர பிரதேசம்!
நாம் நினைப்பதுபோல இல்லை..
மேம்பாலங்கள், மேன்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்பு, நவீன,டிஜிட்டல் முறைக்கு மாறியிருக்கிறவனக்கமே
கிராமங்கள் அங்கேயும் அனாதைதான்
எனது நன்பரின் உதவியுடன் இந்த பயனம் சாத்தியமாயிற்று..
கோதுமை வயல்கள் நடுவே அவரது இல்லம் குளிர்சாதன பெட்டி க்கான அவசியமின்றி இருந்தது
கோடையில் நெல்லும் குளிர் காலத்தில் கோதுமையும் கூடவே துவரையும்,அவரையும்,கொத்தமல்லியும் ,காய்கறி மற்றும் பருப்பு வகைகளும் இயற்கைக் விவசாய முறையில் விளைவிக்கின்றனர்..
உணவு வகைகள் வியக்க வைக்கிறது
காலையில் நீர் தருவதில் தொடங்கி இரவு வரை தொடர்கிறது இனிப்பு வகைகள்..உருளைக்கிழங்கு இல்லாமல் ஒரு வேளை கூட இல்லை..
வாரணாசி யும் மதுரைக்கு ம் நிறைய ஒற்றுமைகள்..
கோவில்கள் தொடங்கி, நெருக்கமான சாலைகள், சிற்றுண்டி உணவகங்கள் ,தெருவெங்கும் திருவிழாக்கள்..
அங்கும் ராமேஷ்வரம் என்ற பெயரில்
ஊர் இருகிறது..
கங்கையை கங்கா ஜி என்று மரியாதையாய் அழைகிறார்கள்..
கடல் போல கங்கை ...
கட்டுமர பயணம்...
கங்கை செய்யும் பயணம் பிரமிப்பூட்டுகிறது
புத்த மடாலயஙகள்
பத்தாம் நூற்றாண்டு சிற்பங்கள் என சாரனாத்தில் சரளமாய் காணகிடைக்கிறது
சிறு வயதில் வரலாறு பாட புத்தகங்களில் படித்ததை நேரில் பார்க்கும் அனுபவம் அளவிலாதது..
ஊடகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து யோகி க்கு இலவசமாக விளம்பரம் செய்ய ,அவர் வெற்றி பெருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
காலை வனக்கமே
ஜெய் ஷ்ரிராம் தான்
மனதில் மரியாதை இருக்கிறதோ இல்லையோ ,காலில் பொட்டு பொட்டென்று விழுந்து வணங்குகின்றனர்...
செல்வ செழிப்புடன் உள்ள மாநிலம் நம்மை விட பிந்தங்கியதின் காரணம் தெரியவில்லை..
எந்த வட இந்தியாவும் விதிவிலக்கல்ல ,ஆண்களின் பான்பராக் துப்பிய ரங்கோலிகள்
அங்கும் அதிகம்
வரும்போது உடன்பயனித்த ராஜஷ்தான்
முன்னாள் இணை முதல்வர்
திரு சச்சின் பைலட்! தமிழ் பேசியது பெருமையாக இருந்தது
நான்கைந்து நாட்கள் அமைதியாக, அனுபவம் மிகுதியாய் நிறைவாய் முடிந்தது.








No comments:
Post a Comment