உன் ஊர் தெப்பம்
உன் வீட்டு தெருமுனை
என் மூளை பார்வைக்கு
உத்தரவு இடுகிறது
நெருங்கி வருகையில் ஒரு கடுகளைவு
உருவத்தை கண்டுபிடிக்கிறது
இந்த முறை உன் கையில் கைக்குழந்தை யும்
எதிர் எதிர் திசையில்
நொடி பொழுதில் கடக்கிறது
நம் வாகனம்
உயிர் ஊடுருவ ஒரு பார்வை
என்ன நினைத்தோம் இருவருக்குமே
தெரியவில்லை
இதயம் தாறுமாறாக துடித்து பின் நிலை
கொண்ட ஒரு தருணம்
இனம் புரியாத மனம்
புன்னகைப்பதா,புன்படுவதா
எதையுமே வெளிப்படுத்தாமல் அந்த
நொடியும் கடந்துவிட்டது
வருமா இன்னொருமுறை இந்த நொடி.



No comments:
Post a Comment