நீ
நிலவின் நிழல்
வானவில்லின் துகள்
கவிதையின் கைக்குழந்தை
பாரதியின் புத்தகம்
கனவுக்களுக்கான நூலகம்
மலர்களின் முதல் கனவு
பூங்காவின் தளவமைப்பு
சிரிப்பின் உரிமம் ..
வர்ணங்களுக்கு எடுகோள்
உன் பார்வை விதையில்
எனக்குள் கவிதை முளைக்கும்
உன் புன்னகை ஈரத்தில்
எழுத்துக்குள் எனக்குள் பூக்கும் !
நல்ல வேலை இன்று நீ
என்னுடன் இல்லை ...
இருந்திருந்தால் - பல
மரங்களை இழக்க நேர்ந்திருக்கும்
கவிதை புத்தகங்கள் தயாரிக்க



No comments:
Post a Comment