மும்பை வந்ததிலிருந்து
மறந்து விட்ட, மறக்கடிக்கப்பட்ட பழக்கம் வாசிப்பது ,எழுதுவது..! வாசிப்பது இருந்தால் மட்டுமே எழுதுவது சாத்தியம்
பக்கத்திலே புத்தகங்கள் இருந்தும் நேர சூழல்கள் பாத்தியம் தருவதில்லை
நாம் சுவாசிப்பதை போன்றே அவசியமானது புத்தகம் வாசிப்பது !
நல்ல நன்பர்களை அலமாரிக்குள்ளும் வைத்துக்கொள்ளலாம்!
ஆராய்ச்சி நிலையங்களை அருகில் அடுக்கியும் வைத்துக்கொள்ளலாம்!
புரட்டினால் புத்துணர்வு முகாம்களுக்கு போய் வரவும் செய்யலாம் !
வரலாறுகளை விரல்களில் பிடித்துக்கொள்ளலாம் !
பிடித்த காதலிக்காக கவிதை களவாடிக்கொள்ளலாம் !
படிக்கலாம் வாங்க !
உலக புத்தக தினவாழ்த்துகள் !



No comments:
Post a Comment