எததனை ஒலி சிதறல்களில்
நம் கவனத்தை தொலைத்துக்கொண்டிருந்தாலும்
சில ஒலிகள் மட்டும் நம்
குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துவிடும்
தெருநாயின் அழுகுரல் !
சிறுபறவையின் கூக்குரல் !
சிறுவயது இரவலகர்களின் யாசக குரல்!
பஞ்சு மிட்டைக்காரரின் ஒலிக்கும்
பனிக்கூழ் விற்பவரின் ஒலிக்கும்
பத்து வித்தியாசம் சொல்லுவார்கள் !
படவரியில் வரும் அந்த பிரபல இசையொலி!
ஒளிவுறு விளையாட்டின் தரநிலை ஒலி !
பெயர் தெரியாத அடுத்த தெரு பாட்டியின் அழைப்பொலி !
குழைந்தைகள் தங்களை தொலைத்துவிடாத
ஒலிகளில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்!
No comments:
Post a Comment