உன் பாட்டி சொன்ன கதைகள்..
நிலாவை பிட்டு உனக்கு ஊட்டி விடும்போது
ஒட்டி கொண்ட மூன்றாம் பிறைதான் உன் உதடு என்றும்
மேலும் தன்னை பறிகொடுத்துவிடக்கூடாதென்று
தோன்றியதுதான் அமாவாசையும் பௌர்ணமியும்!
நீ உறங்கும் போது சிரித்த சிரிப்புகளின்போது
பிறந்ததுதான் நட்சித்திரமாம் மேலும்
பகலில் நீ தேவதையாய் சென்று
அவைகளை உறங்கவைப்பாயாம்!
உன் ஒரு சிட்டிகை குங்குமத்திற்காக
குடம் சாய்ந்திருப்பதாக அந்த அந்தி பொழுதின்
செவ்வானத்தை சுட்டி காட்டினாள்!
பாட்டி வடை சுட்ட கதைகளை விட
உன்னிடம் சுட்ட கதைகள் அத்தனை பொருத்தமானது!
No comments:
Post a Comment