ஏதோவொரு மனக்கலக்கத்தில்
நீண்டதூரம் தொலையவேண்டி
அக்காவின் பண்ணைக்காட்டில்
வெகுதூரம் வந்துவிட்டேன்...!
தூக்கணாங்குருவிகள் தங்கள் சத்தத்தை
நிறுத்திக்கொண்டன என் நிம்மதிக்காக !
ஆவாரம் பூ சிரிப்பில்
மனிதர்களை போல் போலித்தனம் இல்லை !
அங்கும் இங்கும் அலைந்த பட்டாம்பூச்சி
என்னை ஒருநிலை படுத்தியது !
அதற்காக என் விரலை நீட்டிய திசையில்
அந்த அடர்ந்த புதரிலிருந்து
வெடுக்கென்று முயல் ஒன்று வெளியேறியது!
நான் வேடன் அல்ல நானும் வேட்டையாடப்படுவன்தான்
என கத்தி சொல்லவேண்டும் என்று தோன்றியது
அதன் நீண்ட காதுகளுக்கு கேட்க்குமல்லவா!
ஈசல் புற்றின் வாசலில் அமர்ந்துவிட்டேன்
ஏதோவொரு உற்சாகம் அதனோடு
நானும் பறக்கலானேன் திசையறிந்த பறைவையாய் !


No comments:
Post a Comment