Saturday, October 14, 2023

குளம் !

குளம் !

கோலங்கள் முற்றுப்பெறாத  ஒரு 

புள்ளியாய் இந்த பெரும் பூமியில்..


 அதன் அமைதியை அடிக்கடி மீன்கள் 

கலைத்துக்கொண்டே இருக்கின்றன!

 நீரின் நிசப்தத்தில் நீந்தும் இலைகள்!

மழையின் பிரதிகள் ஒவ்வொன்றயும் சேமித்துவைக்கிறது! 

மலரின் வேர்களில் கண்ணீராய் கரைத்துக்கொள்கிறது!  

கரைகளில் ஒற்றைக்காலில் தவமிருக்கும் மரங்கள்! 

 நிர்வாணத்தை மறைக்கும்  இருகலபாசிகள்!

 குழந்தைகள் வந்து குதிக்கும் வரை அது 

நிம்மதியற்று இருந்தது !







No comments:

Post a Comment