அரசின் எல்லா ஒப்பந்தங்களின் பின்னாலும்
ஒரு ஒப்பந்தக்காரர் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறார்
மக்களாட்ச்சியின் பின்னால் ஒன்றுக்கும் மேற்பட்ட
முதலாளிகள் வெளிப்படையாகவே இருக்கிறார்கள்
முதலாளித்துவத்தின் முதுகில் ஒரு சர்வாதிகாரம் மறைந்திருக்கிறது
ஆளும்கட்சியின் அரசியலில் அரசாட்சியின் சாயல் இருக்கிறது
கருத்துரிமை எந்நேரமும் கைதுசெய்யப்படலாம்..
கைதிகள் எந்நேரமும் கட்சியில் சேரலாம்!
ஊடகங்கள் ஊமையாகி போகலாம்!
போராளிகளை தீவரவாதிகளாய் சித்தரிக்கலாம்
சிறுபான்மையினரை சிதைக்கலாம்
பிற்படுத்தப்பட்ட மக்களை நசுக்கலாம்
ஆக மொத்தம் இது ஜனநாயக நாடு நம்புங்கள்!

.jpg)


No comments:
Post a Comment