Monday, October 2, 2023

பூக்களை பறிப்பதற்காய் !

உன் பின்வீட்டு தோட்டத்தில்

 பூக்களை பறிப்பதற்காய் வருகிறாய் !

உன் விரல் பட்ட அன்று மட்டும் 

அவை பூச்செடி என்றழைக்கப்படும்!

 நீ பறித்துவிட்டு சென்றாலும் அவை 

உன்னை வெறுப்பதில்லை 

திரும்ப திரும்ப பறிப்பதற்காக 

மீண்டும் பூக்கும்! 

உன்னை பிரிவதை தவிர 

பெரிய வருத்தம் இருக்கப்போவதில்லை !


வேறெதுவும் வித்தியாசமில்லை 

வேரும்  கிளைகளும் உனக்குக்கில்லை 


 இரண்டு செடி தள்ளி உன்னை 

எதிர்பார்த்து பூத்து போய் கிடக்கும்

 என் கண்களையும் சேர்த்து பறித்து போ  !



No comments:

Post a Comment