அரை நாழியில் முடிந்துவிட்ட
நம் அலைபேசி உரையாடல்
காற்றின் அலைவரிசையில் கரைந்துவிட்ட்து!
முன்பே பேசிப்பார்த்து குறிப்பெடுத்த காகிதமெல்லாம் கழுவி ஊற்றியது !
என் உடல்நீர் என்னையே
காறித்துப்பியது வியர்வையாக !
என் ஆறடி உயரம்
ஏளனமாய் என்னை பார்த்தது!
நான் தடுமாறுகிறேனா
நீ தொடரவிடுவதில்லையா என்ற
தீர்ப்புக்குள் வராத தவிப்புகள்!
உன் நேரங்கள் என்னை விழுங்கியது போக மீதமுள்ள தருணங்களில் தயாரித்து கொண்டிருக்கிறேன் உன்னுடன் நடத்த போகும்
அடுத்த உரையாடலுக்காக !
.jpeg)


No comments:
Post a Comment