Wednesday, September 6, 2023

நீ வருவாய்


 கருவக்காட்டின் நடுவே

 நந்தவனம் போல்  உன் வருகை இருக்கும்..!


வெயிலோடும் ஊரில்

வெண்ணிலா பனிக்கூழ் போல 

உன் வருகை இருக்கும் ..!


அத்துணை கூட்டத்திலும் 

நீ ஒரு வானவில் போல 

தனியாய் வருவாய்..!


மழைவரினும் நனையாத 

மெழுகு பொம்மைபோல நீ வருவாய் !


நீ வரும் அந்த ஒற்றை 

நாளுக்காய் வற்றிய 

விழிகளோடு காத்திருப்பேன் 

திரும்ப திரும்ப என்னை ஒரு ஓரப்பார்வையில் உதாசீனப்படுத்திவிட்டு போவதற்காய் ..

உலையில் கொதிக்கும் பொங்கலுக்கு நீ காட்டும் இரக்கும் கூட என் மீது வைப்பதில்லை 

அடுத்த திருவிழாவுக்கும் ஆனந்தமாய் வருவேன் உன் வருகையே என் திருவிழாதானே 





No comments:

Post a Comment