நீ கோபத்தில் பேசிய
வார்த்தைகளை பிடித்து
வானத்தில் தெளித்து விட்டேன் அவை நட்சத்திரங்களாகி போயின !
இரவில் நீ தனிமையில் அமர்ந்திருந்த
அந்த மரம் போதை மரமாகியது !
என்றொவொரு இரவு
ஏதோவொரு வயதில்
தொலைத்துவிட்ட தாவரவியல் புத்தகம் நீ
எப்போது திருப்பி தரப்போகிறாய் !
பின்னிரவில் நீ விழித்துவிடக்கூடாதென இரவே நிசப்தத்தை போர்த்திவிடுகிறது நான் வேவு பார்க்க அனுப்பிய மின்மினிகளையும் சேர்த்து !
.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment