நம் நாட்டின் மீதான
பெருங்கோபங்களில் இதுவும் ஒன்று
கல்வியை வரைமுறையின்றி விற்பது கற்பித்தவன்(தனியார் )நடுத்தெருவில் நிற்பது
ஆறு இலக்கத்தில் கல்வி கட்டணம் ஆசிரியர்களுக்கோ அடிப்படை ஊதியங்கூட இல்லை
வருங்கால வைப்பு நிதியும்
ஈட்டுறுர்தியம் பிடிப்பதில்லை
அரசும் கேட்பதில்லை
அவர்களும் ஒருவகையில் கல்வி தொழிலதிபர்கள் தானே
நீங்கள் கடந்துசெல்லும்
ஒரு தற்காலிக ஆசிரியரின்
கல்வி தகுதியும் வடநாட்டு கட்டிட தொழிலாயின் ஊதியத்தையும் கேட்டுப்பாருங்கள்
நாம் வாழ பழகிவிட்டோம்
நம் ரௌத்திரத்தை அடகுவைத்துவிட்டோம்
ஊழலை பழகிவிட்டோம்
உப்பை குறைத்துவிட்டோம்
மாணவர்களின் மிரட்டலில் இருந்து நிர்வாகத்தின் நெருக்கடியிலிருந்து வீட்டின் வறுமையிலிருந்து
உருவாக்கி தருகிறோம் உலகின் உன்னதமான வெற்றியாளர்களை...
வாழ்த்துங்கள் இன்று மட்டும்
ஆசிரியர் தினம்
.jpeg)


No comments:
Post a Comment