அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போது பொதுவாகவே
அரவை மில்லில் வெளிவரும் துகள்களாய் உருமாறி இருக்க
கூடவே உடலசதியும் ஒட்டிக்கொள்ள
வெறுமை சூழ வீட்டுக்கு சிற்றுர்த்தியில்
போதாக்குறைக்கு இந்த
போக்குவரத்து நெரிசலும் பதம் சேர்க்க
போதும்வரை சோதித்த இன்றய பொழுதை நொந்துகொண்டு புறப்படத்தயாரேனேன்,
........
எதார்த்தமாக இடதுபுறம்
தலைத்திருப்ப சிரித்தபடி அவள் ..!
எனக்கு இடத்துப்புறமாக வந்தாள் அத்தனை நெருக்கடியிலும் ,
ஒவ்வொரு திருப்பத்திலும்
வேண்டி கொண்டேன் !
என் பாதையிலே தொடர்ந்து வந்ததால்
மனம் மகிழ்ந்தது !
புறவழிசாலையிலும் முந்திக்கொண்டு சென்றாள் ,
குன்றத்தூர் அருகே மீண்டும்
என் அருகாமையில்..!
அவளின் வருகையால் என்
தெரு வந்த நேரமே தெரியவில்லை
தூரத்தில் அவள் !
பெயர் நீல நிலா..
வீடு சிவசக்தி நகர் என்று
செய்திகளை பார்த்து தெரிந்துகொண்டேன்
.jpeg)


No comments:
Post a Comment