கடற்கரை மணலை போல
பரவி கிடக்கிறது என் வார்த்தைகள் அலையாய் வந்து வாசித்துவிட்டு போ!
வெறுமையின் மேற்பரப்பில்
விண்ணை நோக்கி தவமி ருக்கின்றன !
சில சமயம் அதை
மழலைகள் எடுத்து கவிதை செதுக்கிருக்கலாம் கரைத்துவிடாதே!
நீ உள்ளிழுத்து சென்ற வார்த்தைகள் போக மீதமிருப்பவையும்
உனக்காக தான் பலரிடம்
மிதி வாங்கி காத்திருக்கிறது !
அவை காத்திருக்கும்
தருணங்கள் பொறுக்காமல்
காற்று தன் கரங்களால் உன்னிடம் சேர்த்த வார்த்தைகள்
பேச்சற்று போயின !
.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment