Tuesday, September 26, 2023

கூப்பிடும் தூரத்தில்

உன் நினைப்பு ஒன்று

 என்னை நினைக்கக்கூடாது என்று

எச்சரித்து விட்டு போகிறது!


 சாயங்காலம் ஆனவுடன் 

சொல்பேச்சு கேளாமல் சாய்ந்துகொள்கிறது

 உன்னைநோக்கி  என் நிழல்!


தேநீர் பழக்கத்தை நிறுத்துவது

 எப்படி சாத்யமில்லையோ அப்படியே உன்னை பார்ப்பதை நிறுத்த சொல்லுவதும் !

 நீ திருடி செல்வதற்காக பத்திரமாய் வைத்திருக்கிறேன் தினசரி உறக்கத்தை!


 தானியங்கி வாகனம் போல் 

உன் பின்னாலே செல்கிறது மனம்!


கூப்பிடும் தூரத்தில் நீ இருந்தும் 

இரையை தவற விட்ட பறவையாய்

 என் சொற்கள் !




No comments:

Post a Comment