உன் நினைப்பு ஒன்று
என்னை நினைக்கக்கூடாது என்று
எச்சரித்து விட்டு போகிறது!
சாயங்காலம் ஆனவுடன்
சொல்பேச்சு கேளாமல் சாய்ந்துகொள்கிறது
உன்னைநோக்கி என் நிழல்!
தேநீர் பழக்கத்தை நிறுத்துவது
எப்படி சாத்யமில்லையோ அப்படியே உன்னை பார்ப்பதை நிறுத்த சொல்லுவதும் !
நீ திருடி செல்வதற்காக பத்திரமாய் வைத்திருக்கிறேன் தினசரி உறக்கத்தை!
தானியங்கி வாகனம் போல்
உன் பின்னாலே செல்கிறது மனம்!
கூப்பிடும் தூரத்தில் நீ இருந்தும்
இரையை தவற விட்ட பறவையாய்
என் சொற்கள் !
.jpeg)


No comments:
Post a Comment