ஏதோவொரு அழுத்தம்
எல்லாநாளிலும் தலைகாட்டிவிட்டுட்டு போகிறது
என்னை மேலும் இனிப்பானவனாகிக்கொண்டே போகிறது
அது பசியான விலங்கு போன்று
என் நேரத்தையே தின்று தீர்க்கிறது
மனதிற்கு விளங்கு போட்டு
ஒரே திசையில் போகிறது
சில சமயம் திசை தெரியாது போகிறது
அடிக்கடி ஏமாற்றம் ஏமாற்றமால் வந்துபோகிறது
காற்று கள்வர்களின் பக்கம்
கள்வர்கள் உண்மை பேசும் காலம்
காலம் பேசத்தெரிந்தவர்களின் கையில்
கைகள் செய்வதறிய சூழல்
சூழல் குழப்பங்களின் சூழ்ச்சியில்
சூழ்ச்சி அறிந்தவர்கள் மகிழ்ச்சியாய்
என் பாதை ஏதோவொரு
அழுத்தத்தோடே போகிறது
அதன் முடக்கு வளைவை தேடி..



No comments:
Post a Comment