தாறுமாறாக ஓடும்
மண்ணு லாரிகளை கடந்து,
முறையற்ற குப்பை வாகனங்களுக்கு வழிவிட்டு ,
நகரில் அனுமதியற்ற நேரங்களில் ஓடும் கனரக வாகனங்களை கடந்து,
வரைமுறையற்ற வேகத்தடைகளை தாண்டி ,
குடிநீர் வாரியம் ,கழிவுநீர் வாரியம்
வாரியம்,வாரியமாய் வாரியிறைத்த சாலைகளை சகித்துக்கொண்டு,
பிள்ளையை பத்திரமாய்
பள்ளியில் விட்டுவிட்டு
கனத்த இதயத்துடன் கடந்து செல்ல நேருகிறது இந்த செய்தியை ..
பள்ளி சென்ற மாணவி விபத்தில் பலி குடும்பமே பலி !
எல்லா விதிமீறல்களிலும் ஏதொவொருவரின் வாழ்வு விதி மாற்றப்படுகிறது



No comments:
Post a Comment