தினமும்
ஒருவேளை என் கனவிலும்..
இருவேளை என் கவிதையிலும்..
மூன்றுவேளை உன்னை பார்ப்பதிலும்
புண்ணியம் அடைகிறது - என்
ஒவ்வொரு நாளும்..
கனலை விழுங்கிவிட்டு
தலைகால் புரியாமல்
சுற்றும் பூமியைப்போல..
காதலை விழுங்கிவிட்டு
உன்னையே சுற்றுகிறேன்
ஒவ்வொரு நாளும்..
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment