ஒவ்வொரு முறையும் உடைகள் என பொய் சொல்லி
பட்டாம்பூச்சிகளை உடுத்திக்கொண்டு வருகிறாய் !
காற்றில் அவ்வப்போது பட்டாம்பூச்சிகள் பறந்துவிட
வெட்கத்தை உடுத்திக்கொள்கிறாய்! சிலசமயம்
அவை படபடக்க துடிதுடிக்க வைக்கிறது
என்
பார்வயை.. !
உன்னையே உலகமெனெ
உராய்தலின் வழியே
உயிர்கொள்கிறது.!.
உன் தீண்டலுக்காய் சரிந்து சரிந்து
விழுகிறது துப்பட்டா!
உன் நனைதலுக்காய் எனக்குமுன்
மழையிடம் வேண்டிகொள்கிறது உன்
ஆடை!
காற்றுக்கு தலைசாய்க்கும் சாக்கில்
உன்மீது சாய்ந்து சரசம் கொள்கிறது!
இரு
மாதுளைகளை இறுக்கிப்பிடித்தபடி
இறுமாப்புடன் சிரிக்கிறது
என்னை நோக்கி ..!
ஒவ்வொரு முறையும் உன்னால்
கலையப்படைவதை தவிர வேறெந்த
கவலையும் அதற்கில்லை !
No comments:
Post a Comment