பழுதுபட்ட சாலை பள்ளங்களில்
நிரம்பி வழிகிறது நான் கட்டிய
சுங்க வரியின் நாணயங்கள்
சில குழிகளில் எங்கள் குழந்தைகளின் உயிர்பலி !
உடைத்துக்கொண்டு வீணாகும்
குழாய்களில் எல்லாம் எங்கள் குடிநீர் வரி !
சேவைக்கும் வரி செலவுக்கும் வரி
சல்லடை வாளியில் எங்கள் சேமிப்பு !
எங்கள் கழிவறைக்கு பின்னால்
குவளையோடு நிற்கிறீர்கள்
வரி வசூலிக்க !
என் வருமானத்தை வங்கியில் கட்ட
வரிசையில் நிற்கும்போது
பலத்த பாதுகாப்புடன் ஓடுகிறான் உங்களின் கூட்டாளி
வாங்கிய கடனை ஏமாற்றிவிட்டு
வந்தே பாரதம் !



No comments:
Post a Comment