நீ கோபத்தில் பேசி திரும்பியவுடன்
உன் கோபம் மீண்டும் திரும்பி கெஞ்சிவிட்டு செல்கிறது
அவளை கோபிக்காதே என்று..
உன் வெறுப்பை இன்னும் ஆழமாய் அழுத்தமாய் காட்டிவிட்டு போ நீரில் அமிழ்த்திவிடும் ஒரு பந்தைப்போல
உன் மௌனம் என்னிடம் பேசிவிட்டுப்போகிறது
என் அறை முழுவதும்
உன் அமைதி நிரம்பியிருக்கிறது
உன் எண்ணா விரதத்தின் காரணம் என்னவென்று சொற்களால் நிரப்பி தூரத்தில் தூக்கியெறிந்துவிட்டு போ
உன் பிரிவின் சேமிப்பாய் வைப்பேன்
.jpeg)


No comments:
Post a Comment