உங்களை வேடிக்கை கூட
பார்க்க விரும்பாத
தூரத்தில் இருக்கிறேன்
இருந்தும் கதை சொல்கிறீர்கள்..
அறம் மறந்து புறம் சொல்கிறீர்கள் தெருவில் நின்று குறை கூறுகிறீர்கள்..
தனிமை வாய்த்தால் எண்ணியவற்றை திணிக்க முயல்கிறீர்கள் ..
எதிர்மறை கூற்றுகளால்
நேர்மையை மறைக்கிறீர்கள் ..
இன்றோ நாளையோ என்றோ
உண்மை தன் முகத்தை தானே காட்டும்
இயற்கையும் உண்மையையும் பிரமிக்கத்தக்கது !
நம் வெற்று கைகள் அதன் முன்
தோற்று போகும் !
உண்மை!
பாதைகள் நீளமானதாய் இருந்தாலும் சேருமிடம் சரியானதாய் இருக்கும்
.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment