Saturday, May 16, 2009

உறக்கம் எழுதும் கவிதை


உறக்கம் எழுதும் கவிதை
இந்த கனவுகள்..

இரவில் விதைத்தால்
விடிவதற்குள்
பூத்துவிடும் செடி
கனவு மட்டும்தான்..

கனவுக்கு
பசியெடுத்தால் நம்
நேரத்தை சாப்பிட்டுவிடும்..

அதிகாலை கனவுகள்
கரைந்துபோய்விடுகின்றன
பனித்துளியின் அடர்த்தியில்..

அவளுக்காய் காத்திருக்கிறபோது
அவள் வரவில்லை.- இந்த
கனவு மட்டும் தவறாமல்
வருகிறது..

ஏய் கனவே
உறங்குவது போல
ஒரு கனவை கொடு
அப்போதாவது
உறங்கிகொள்கிறேன்..

எல்லா கல்லறைகளிலும்
ஏதாவது ஒரு
கனவும் சேர்த்தே
புதைக்கப்படுகிறது..

1 comment: