
கவிஞனான எனக்கு
மூட நம்பிக்கைகள் கிடையாது
காதலனான எனக்கு
மூட நம்பிக்கைகள் உண்டு
எதிரிலிருக்கும்
அம்மன் கோவிலுக்கு
ஏழெட்டு முறைதான் போயிருப்பேன்
உன்னை பார்த்த பிறகு
எட்டி கூட பார்த்ததில்லை
நம்பாதீர்கள்
இதெல்லாம் நடக்காது என்று
நன்பர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு
உனக்கான
ராசிபலனை நாளிதலில் பார்ப்பேன்
நிதமும்..
நீ அருகில் இல்லாவிட்டாலும்
எங்கிருந்தோ என்னை பார்ப்பதாக
நம்பிக்கொண்டு
என்னை விரும்பி பார்க்கும் பென்களைக்கூட
திரும்பி பார்க்க மறுக்கிறேன்..
நீ கோபித்துக்கொள்வாயோ
என்ற குருட்டு நம்பிக்கைதான்..


good
ReplyDeletearumai
ReplyDelete