மழை காலம் முடிந்துவிட்டதென
குடைகளை நீட்டி
மடித்து
வீட்டில் வைத்துவிட்டு
வந்தவர்களையெல்லாம்
வைத்து செய்துவிட்டது இந்த மழை
உடைகள் உருகி
மழையோடு ஓடாத குறைதான்
ஏழைகளின் எலும்பை தவிர
ஓடைகள் வகை வகையாய் வாரி சுருட்டிக்கொண்டு ஓடின
கலப்படமாய்
போட்ட
கவுன்சிலர்களின் (கோ )மானத்தை
மழையில் மிதக்க
வைத்துவிட்டது!
ஊருணியில் வீடுகட்டியவரையெல்லாம் யாருநீ என ,
தனக்கான பாதையில்
தனித்து பயணிக்கிறது தண்ணீர்!
பயத்தோடு பார்வயாளர்களாய் மக்கள் !
.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment