Friday, August 18, 2023

மும்பை மழை காலம்

 

மழை காலம் முடிந்துவிட்டதென

குடைகளை நீட்டி மடித்து

வீட்டில் வைத்துவிட்டு வந்தவர்களையெல்லாம்

வைத்து செய்துவிட்டது இந்த மழை

உடைகள் உருகி மழையோடு ஓடாத குறைதான்

ஏழைகளின் எலும்பை தவிர

 ஓடைகள் வகை வகையாய் வாரி சுருட்டிக்கொண்டு ஓடின

கலப்படமாய் போட்ட சாலையையெல்லாம் கரைந்துபோய் 

கவுன்சிலர்களின் (கோ )மானத்தை

மழையில் மிதக்க வைத்துவிட்டது!

ஊருணியில் வீடுகட்டியவரையெல்லாம் யாருநீ என ,

தனக்கான பாதையில்

தனித்து பயணிக்கிறது தண்ணீர்!

பயத்தோடு பார்வயாளர்களாய் மக்கள் !

 



No comments:

Post a Comment