Thursday, November 3, 2022

ஒற்றை புகைப்படம்..

 மகிழ்வான நாட்களில் பலவித

மலர்களின் நிழற்படங்களும்..

கவலை வரும் போதெல்லாம்

கடவுள்களின் புகைப்படங்களும்..

கனவுகள் வரும் காலங்களின்

வண்ண வண்ண படங்களும்..

வால்பேப்பராய் அவ்வப்பொது

அலங்கரித்த என் அழைப்பேசியில்...

இவை மொத்தமுமாய் நிறைந்த

ஒற்றை புகைப்படம்..

இனி என்றும் இருக்கும்

என் குழந்தையின் குருஞ்சிரிப்பு..




1 comment: