Wednesday, November 2, 2022

என் அப்பா

 வறண்ட சரளை நிலத்தில் ,

நீர் நிலைகள் அறவே அற்ற, சிவகங்கை மாவட்டத்தில்... மழைக்காடுகள் போல் 

மரங்களை வளர்த்த

 ஒரு முன்னோடி விவசாயி!

இரசாயன உரங்களின்றி

 இயற்கை முறையில் தான் மட்டுமன்றி பலரருக்கும் உத்வேகமாகவும் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார் 

பலர் இன்று மறந்து போயிருக்கலாம் கல்வி கற்பித்த ஆசிரியராகவும் மட்டுமன்றி 

காடு உற்பத்தி செய்த இயற்கையாளரும் கூட...

என் அப்பா !

அடர்ந்த செறிவான மர நிழலில் எங்களின் ஆரோக்கிய 

சுவாசத்தின் விதையை விதைத்தவர் 


என் தந்தையை பற்றி நான் கவிதை ஏதும் இதுவரை எழுதியதில்லை 

ஒரு கவிதைக்குள்

அவரை பற்றி அடக்கிவிட முடியாது என்பதே உண்மை 

என் எழுத்து என் நிமிர் என் ஆளுமை  

எல்லாம் உங்களின் மகிமை 

தந்தையர் தின வாழ்த்துக்கள் !

2 comments: