உங்கள் கல்லறைக்கு நீங்களே
செங்கள் சேமிக்கிறீர்களே..
சுடுகாட்டிற்கு நீங்களே
சுள்ளிகளை பொறுக்கிகொள்கிறீர்களே.!
சுகத்தை நாடிச்சென்று -
நடமாடும் சவமாய் திரும்புகிறீர்களே.!
ஒருநிமிட சலனத்தில்
தேடி வருகிறதே மயாணம்..!
சிவப்பு விளக்கு பகுதிகளால்
உங்கள் இதய வாகனம்
நின்று போகக்கூடும்..!
விளைவு தெரியாமல்
மாட்டிக்கொண்டால்
விதி என்று விட்டு விடலாம்..
தெரிந்தே மரணக்கடலில்
விழுவதும் எதற்கு?- உங்கள்
விதையையும் வீனாக்குவதும் ஏனோ?
மாற்றான் தோட்டத்து
மல்லிகை அழகாய்தான்
பூத்திருக்கும் - கூடவே
மரனமும் காத்திருக்கும்..!
Saturday, April 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment