Tuesday, March 3, 2009

தயாராய் இரு


தமிழ் குடிமகனே
தயாராய் இரு
ஓட்டு கேட்டு வருகிறோம்..

கொல்லைப்புறத்தில்
கொள்ளையடித்து
வாசல் வழியே
இலவசமாய் கொடுப்போம்
தயாராய் இரு

சாதிக்கு சானை பிடித்து

மதத்துக்கு உரம் போட்டு
ஓட்டு கேட்டு வருகிறோம்
தயாராய் இரு

அண்ணாச்சி கடைக்கு
பாடை கட்டி விட்டு
அம்பானி கடை
திறந்து வைப்போம்
தயாராய் இரு

ஒருமுறைதான் வருவோம்
ஒழுங்கா பார்த்துக்கோ
ஓட்டு கேட்டு வருகிறோம்
தயாராய் இரு..!

1 comment:

  1. mikka nanru
    mikka nanru
    yosikka vaithamaikku miga nanri

    ReplyDelete