Monday, February 23, 2009

mithavaiyi pootha malarkal


மத்தாப்பூ

கந்தக கிடங்குகள்
எங்கள் வகுப்பறைகள் ..

திக்குச்சிகளை எண்ணி எண்ணி
கணக்கு கற்று கொண்டோம் ..


சாதத்தின் சுவைக்கு சிறிது
விசத்தையும் பிசைந்துகொள்கிறோம் ..

உயிர் வாழ்வதற்கு
கூலி கொடுக்கிறிர்கள்
நாங்கள்
கூலிக்காக உயிர் விடுகிறோம்..


விடிந்தால் எங்கள்
வாழ்க்கை போவது
இருளை நோக்கி..

பட்டாசு விபத்தில்
பலியான பிள்ளைக்கு..
கொல்லி வைக்கபோகிறேன்
கொளுத்துங்கள் மத்தாப்பூ
நன்றாக ..!

1 comment: